கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோட்டில் உள்ள வள்ளி நகரில் வசிப்பவர் வினோத்குமார். அவரது மகள் புவனேஸ்வரி (வயது 19) நடன பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி வீட்டில் செல்போன் பேசிக் கொண்டிருந்தாராம். இதை இவரது தாயார் கண்டித்தார். இதனால் மனம் உடைந்து புவனேஸ்வரி அவரது வீட்டில் வேட்டியை ஜன்னலில் கட்டி தூக்கு போட்டு தூங்கினார் .இதை பார்த்து அவரது தாயார் வினுதா சுதா அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்: டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு புவனேஸ்வரி இறந்துவிட்டதாக கூறினார்கள். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடன ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை…
