கோவை அருகே உள்ள மருதமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தகோவில் முருக பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 30–ந் தேதி மாலை 6 மணிக்கு மங்கள இசை, திருமறை, திருமறை பாராயணம், விநாயகர் பூஜை, இறை அனுமதி பெறுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.31-ந் தேதி காலை 9 மணிக்கு மூத்த பிள்ளையார் வழிபாடு ,தவகோள் வேள்வி ,திருமகள் வழிபாடு, விமான கலசங்கள் நிறுவுதல் நிறையாகுதி, மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அடுத்த மாதம் ஏப்ரல் 1-ந் தேதி காலை 8- 45 மணிக்கு புனித மண் எடுத்தல், புனித நீர் எடுத்தல், புனித அனல் அழைத்தல், மாலை 4 – 35 மணிக்கு திருச்சுற்று தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதல் கும்ப அலங்காரம் ,இறை சக்தியை திருக்குடங்களுக்கு எடுத்தல் மூலவரிடம் இருந்து யாகசாலைக்கு திருக்குடங்களை எழுந்தருள செய்தல், விநாயகப் பெருமானுக்கு முதற் கால வேள்வி பூஜை ஆகியவை நடக்கிறது. 2 – ந் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை 3 – நதேதி காலை 9 மணிக்கு நாலாம் கால வேள்வி பூஜை மாலை 5 – 30 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜை இறைவனின் அருட்கலைகளை நாடியின் வழியே எழுந்தருள செய்தல், நிறை ஆகுது பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. 4-ந்தேதி அதிகாலை 4:30 மணிக்கு ஆறாம் கால வேள்வி பூஜை காலை 6 மணி முதல் 6-45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கு பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் மாலை 7-30 மணிக்கு யாகசாலையில் இருந்து மூலவருக்கு திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி காலை 8:30 மணிக்கு மருதாச்சலம் மூர்த்தி கோபுர விமானம், ஆதி மூலவர் கோபுர விமானம், ராஜகோபுரம் கொடிமரம் பரிவார கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம் காலை 9 மணிக்கு ஆதி முதல்வர், விநாயகர், மருதாசல மூர்த்தி, பட்டீஸ்வரர் மரகதாம்பிகை, வீரபாகு ,கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. பின்னர் மாலை 4 -30 மணிக்கு மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 5 – 30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி யுடன் வள்ளி – தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வருகிறார். விழாவில் பேரூர்ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம். குமரகுருபர சுவாமிகள்,கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஸ்ரீ. பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், உள்பட பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சேகர் பாபு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் கோவில் துணை ஆணையர் செந்தில்குமார் அறங்காவலர்கள் மகேஷ் குமார், பிரேம்குமார், கனகராஜன் ,சுகன்யா ராஜரத்தினம், ஆகியோர் செய்து வருகிறார்கள். விழாவில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.இதை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 4-ந் தேதி கும்பாபிஷேகம்.!
