பாரதியார் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் லேப் டாப் திருட்டு..!

கோவை : சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மகன் சண்முக ராஜேஸ்வரன் (வயது 21 ) பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம். பி. ஏ .முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் விடுதியில் ஒரு அறையில் தங்கி உள்ளார் . கடந்த 4-ந்தேதி இவர் அறையை பூட்டி விட்டு கல்லூரிக்கு சென்று விட்டார் . திரும்பி வந்து பார்த்த போது அறையில் இருந்த லேப் -டாப்பை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சண்முக ராஜேஸ்வரன் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..