சூலூரில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை..!

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள பாப்பம்பட்டி ,ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் ( வயது 48) கூலி தொழிலாளி. இவர் கடந்த 7- 12 – 2020 அன்று தனது மனைவியை கொலை செய்தார். இவரை சூலூர் போலீசார் கைது செய்து கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கணவர் ஆறுமுகத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.