கோவை ஓட்டல் பாரில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் – மானேஜர் கைது.!!

கோவை பீளமேடு கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஓட்டல் பாரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வைத்திருப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி அங்கு திடீர்சோதனை நடத்தினார் .அப்போது 130 மது பாட்டில்களை பதுக்கி வைத்துவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குன்னூர் வண்ணார்பேட்டையைச்சேர்ந்த பார் ஊழியர் சுரேஷ் பாபு ( 49 ) கைது செய்யப்பட்டார்.பார் உரிமையாளர் மகேந்திரன் தப்பி ஓடிவிட்டார்.இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.