லாரி மோதி பெண் பரிதாப பலி..

கோவை புதூர் ,நாக பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பூஜன். இவரது மனைவி அஞ்சலி (வயது 50) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கேஸ் சிலிண்டர் பாரம் ஏற்றிய லாரி இவர் மீது மோதியது. இதில் அஞ்சலி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இன்று காலையில் இறந்தார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வீரப்பனூர், அம்மன் நகரை சேர்ந்த லாரி டிரைவர் முருகேசன் ( வயது 54) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது..