தொழிலில் நஷ்டம்… கோவை குளத்தில் குதித்து திருப்பூர் வியாபாரி தற்கொலை..

திருப்பூர் மாவட்டம் அவினாசி சோலையூர் ரோட்டில் உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சங்கர் (வயது 35 )பட்டாசு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் இவரது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பலரிடம் கடன் வாங்கினார். அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் நேற்று கோவைக்கு வந்தார். உக்கடம் பெரிய குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தாயார் சாவித்திரி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..