பங்கு சந்தையில் நஷ்டம்… வாலிபர் தற்கொலை..

கோவை : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 42) இவர் நீலம்பூர், அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார் .ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்திருந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மனைவி மோனிகா சூலூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.