காதல் திருமணம் செய்த மனைவி 2 குழந்தைகளுடன் திடீர் மாயம்..!

கோவை மாவட்டம்பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர், திருவள்ளூர் காலனி சேர்ந்தவர்ஐயப்பன் ( வயது 32) கூலி தொழிலாளி இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 26) இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.இவர்களுக்கு சந்தோஷ் ( வயது 8) சூர்யா ( வயது 6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முத்துலட்சுமி கடந்த 13 ஆம் தேதி தனது 2 மகன்களுடன் எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து ஐயப்பன் கோட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.