கோவை கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – மதுரை கும்பல் கைது.!!

மதுரையை சேர்ந்த ஒரு கும்பல் அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக மாநகர தனிபடை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று அங்குள்ள ரயில்வே கல்யாண மண்டபம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த அஜித்குமார் (வயது 27), மதுரை பாண்டியன் நகர் செவத்த பாண்டி ( வயது 26) காமராஜபுரம் சதீஷ்குமார் (வயது 33) அம்மாபட்டி முனியாண்டி (வயது 17) தெரிய வந்தது. இவர்களிடமிருந்து கஞ்சா இருசக்கர வாகனம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது..