வீடு புகுந்து செல்போன் திருட்டு – வாலிபர் கைது..!

கோவை அருகில் உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ, ஸ்ரீராம் கார்டனை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40 ) சீர நாயக்கன்பாளையத்தில் உள்ள பல் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வீட்டை திறந்து போட்டு விட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி வீட்டினுள் புகுந்து அங்கிருந்த 2 செல்போனை திருடி கொண்டு  தப்பி சென்று விட்டார். இது குறித்து கவிதா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வடவள்ளி , வேம்பு அவென்யூ, தாமரை வீதியைச் சேர்ந்த அஜித்குமார் ( வயது 25 )என்வரை கைது செய்தார் . இவரிடம் இருந்து  2 செல்போன்கள் மீட்கப்பட்டது.