பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் ஊத்துக்குளி ,ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் ( வயது 51 )கட்டிட தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்றுகுடிபோதையில் வீரமாத்தி அம்மன் கோவில் அருகே உள்ள நெல்லிக்காய் மரத்தில் காய் பறிக்க ஏறினாராம்.திடீரென்று கால் வழுக்கி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்த அவரது மனைவி தனலட்சுமி பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடிபோதையில் மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து சாவு..
