வீடு புகுந்து பெண் மானபங்கம் – பெயிண்டர் கைது..!

கோவை புலியகுளம், கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தூய மணி. இவரது மனைவி காஞ்சனா தேவி (வயது 47) இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜேஷ் என்ற முத்துகிருஷ்ணன் ( வயது 30) பெயிண்டர். இவர் அடிக்கடி காஞ்சனா தேவியை கேலி – கிண்டல் செய்து வந்தாராம். காஞ்சனா தேவி இதை எச்சரித்தார். அவர் கேட்கவில்லை நேற்று காஞ்சனா  தேவி வீட்டில் தனியாக இருந்த போது ராஜேஷ் என்ற முத்துகிருஷ்ணன் வீட்டில் புகுந்து அவரது கையை பிடித்து மானபங்கம் செய்ய முயற்சித்தார். உடனே அவர் சத்தம் போட்டார். உறவினர்கள் ஓடி வந்து ராஜேசை பிடிக்க முயன்றனர். அவர்களை மிரட்டி விட்டு ராஜேஷ் என்ற முத்துகிருஷ்ணன் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் என்ற முத்துகிருஷ்ணனை நேற்று இரவு கைது செய்தனர் . இவர் மீது கொலை மிரட்டல் மான பங்க முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.