வீட்டில் பணம் வைத்து “மெகா ” சூதாட்டம் – கார், ரூ.3.48 லட்சம் பறிமுதல்.!!

கோவை சின்ன வேடம்பட்டி, பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது.. சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக தொப்பம்பட்டி செந்தில்குமார் (வயது 41) ரத்தினபுரி கண்ணப்ப நகர் சதீஷ்குமார் (வயது43) சின்ன வேடம்பட்டி தனராஜ் ( வயது 32) சத்தியமூர்த்தி (வயது27 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அசோக் என்பவர் தலைமறைவாகிவிட்டார் . இவர்களிடமிருந்து சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ. 3 லட்சத்து 48 ஆயிரம் பணமும் , ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது..