மேட்டுப்பாளையம் கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்யும் வீடியோ.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் தனிநபர் செய்த ஆக்கிரமிப்பை அகற்றிய வட்டாட்சியரை இடைக்கால பணிநீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பாக தனி நபர் செய்த ஆக்கிரமிப்பை அரசு அலுவலக நடைமுறைகளை பின்பற்றி அகற்றிய காரணத்திற்காக எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் இடைக்கால பணிநீக்கம் செய்தது மட்டுமின்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்வரன் குமார் ஜடாவத் அவர்களின் ஊழியர் விரோத நடவடிக்கையும்,பாரபட்சமாக நடந்து கொள்வதையும் மற்றும்
பெண் அலுவலர்களை ஒருமையில் வசைப்பாடி தரக்குறைவாக நடந்து கொள்ளும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனின் தரம் தாழ்ந்த செயல்களைக் கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் மேட்டுப்பாளையம் வட்டக்கிளை சார்பாக மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் பவதாரணி தலைமை தாங்கினார்.
இந்தோர் நலத்திட்ட வட்டாட்சியர் ரங்கராஜன் முன்னிலை வகித்தார். வட்ட பொருளாளர் சிவசக்தி வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் செந்தில்குமார் கண்டன உரையாற்றினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் அவர்களின் இடைக்கால பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்..