கோவை பேரூர் ஆதினத்திடம் கருணாநிதி உருவ 100 ரூபாய் நாணயம் வழங்கி ஆசி பெற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!

கோவை பேரூர் ஆதினத்திடம் கருணாநிதி உருவ 100 ரூ நாணயம் வழங்கி ஆசி பெற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

உழைப்பிற்கு எடுத்து காட்டாக ஒட்டுமொத்த தமிழ்சமுதாயத்தின் செல்லபிள்ளைகலைஞரின் பேரப்பிள்ளைமாமன்னன் உதயநிதிஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் பதவி கொடுப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

கோவை, பேரூர் ஆதினம் மடத்தில் மருதாசல அடிகளார் சுவாமிகளை நேரில் சந்தித்த சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை அவரிடம் வழங்கி ஆசிபெற்றார்.அவருடன் சிறுபான்மை மாநில பொறுப்பாளர் ரபீக்,ஏர்போர்ட் முருகேசன், மற்றும் சிறுபான்மை அமைப்பினர்,உறுப்பினர்கள் உடன் இருந்தனர் ,அங்கு பேசிய அமைச்சர் பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார் ஆன்மீகம் பேசும் இந்த மடத்தில் , மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும்,தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்கு மட்டுமின்றி அனைத்து சமூகத்தை அரவணைத்து செல்லும் இடமாகவும், சமூகநீதிக்கு எடுத்துகாட்டாகவும் , கோவையில் செம்மொழி நடத்துவதற்கு உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார், மேலும் முதல்வரை சந்தித்த போது, கோவைக்கு செல்கிறேன், பேரூர் ஆதீனத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை அளிக்க உள்ளேன் என சொன்னேன்.அப்போது முதல்வரும் வாழ்த்து சொன்னார்.ஒட்டுமொத்த தமிழ் உணர்வோடு இருக்கக்கூடிய அனைவரையும் ஒருங்கிணைப்பது தான் தமிழர் கலாச்சாரம். தமிழோடும் இருக்கக்கூடிய பேரூர் ஆதீனம் அன்பை போதிக்கிறது என்றார்

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதவை ஆரம்பித்திலிருந்து எதிர்த்து வருகிறோம். ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் அதேபோல் ஜமாத்தின் ஒருமித்த கருத்தும் இந்த வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதவிற்க்கு எதிராக உள்ளது. மத நல்லிணக்கத்திற்க்கு வேற்றுமை செயல் காணும் வேலையில் மத்திய அரசு இந்த சட்டம் மூலம் ஒற்றுமையில் வேற்றுமையை காண வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.இது கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்..