பெட்ரோல் பங்கில் பணம் கையாடல் – ஊழியர் கைது..!

கோவை ஆர் .எஸ் . புரம், டி.பி ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தண்டபாணி ( வயது 37 )இவர் சென்னை, சாணான் குப்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.இவர் கடந்த சில நாட்களாக இந்த பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். பங்கி வசூலான ரூ 64 ஆயிரத்தை இவர்கையாடல் செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து ஆர். எஸ். புரம் போலீசில் கேஷியர் அஜித்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டபாணியை நேற்று கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சேலையூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது.