கோவை தொழிலதிபர் வீட்டில் பணம், நகை, கார் திருட்டு..!

கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள தண்ணீர் பந்தல், சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராவ் (வயது 66) தொழிலதிபர் இவர் கடந்த 20ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ராஜஸ்தான் மாநிலத்திற்கு தன் மனைவியடன் சென்று விட்டார். நேற்று பக்கத்து வீட்டில் வசிக்கும்ராஜா ஸ்ரீநாத் என்பவர் ராமகிருஷ்ண ராவுக்கு போன் செய்து வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இதைய டுத்து ராமகிருஷ்ண ராவ் நேற்று விமானம் மூலம் கோவை வந்தார் வீட்டில் வந்து பார்த்தபோது போட்டி கோவில் இருந்த கார்,பீரோவில் இருந்த 5 பவுன் செயின், பணம் ரு 1 லட்சத்து 60 ஆயிரம் ஆகியவை கொள்ளைய டிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து பீளமேடுபோலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தமிழரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.