பேஸ்புக்கில் டிரேடிங் செய்வது குறித்து பண மோசடி- ரூ.19 கோடியே 54 லட்சத்தை சுருட்டிய இன்டர்நேஷனல் கிரிமினல் அதிரடி கைது..!

சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் வயது 41 என்பவர் காரப்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கேப் ஜெமினி என்ற தகவல் தொழில்நுட்ப கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பேஸ்புக்கில் டிரேடிங் செய்வது எப்படி என்பது தொடர்பான விளம்பரத்தை பார்த்து லைக் கொடுத்து வந்து 9514 761152 மற்றும் 9748223511 என்ற மொபைல் போன் எண்ணிலிருந்து ஜோஷிதா வர்ஷினி என்ற பெயர் கொண்ட நபரிடமிருந்து வாட்ஸ் அப்புக்கு htpps//indiatcg. Com என்ற டிரேடிங் தளத்தின் லிங்க் மெசேஜ் வந்ததாகவும் அதை திறந்து உள்ளே போய் டிரேடிங் தொடர்பான விவரங்களை பார்த்த பின்பு இன்ஸ்டியூசணல் அக்கவுண்ட்டை பயன்படுத்த தனக்கு அனுமதி கிடைத்ததாகவும் அதனைத் தொடர்ந்து கார்த்திக் மற்றும் அவரது மனைவி வங்கி கணக்குகளின் மூலம் பல்வேறு தவணைகளில் மோசடிக்காரர்கள் கொடுத்த பல வங்கி கணக்குகளுக்கு மொத்தமாக ரூ 1 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்தை செலுத்தி பணத்தை இழந்து விட்டதாகவும் எங்களை ஏமாற்றிய கேடி நபர்களை கண்டுபிடித்து இழந்த பணத்தை மீட்டு தர ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் புகார் மனு கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது . விசாரணையில் கேடிகள் 1. ரமேஷ் குமார் வயது 38 தகப்பனார் பெயர் வெற்றிவேல் நாடார் ராஜேஷ் நகர் 1 வது குறுக்கு தெரு பள்ளிக்கரணை சென்னை2. அருண் வயது 30 தகப்பனார் பெயர் ஆனந்தன் பெரிய தெரு தொண்ட மாநத்தம் கிராமம் ஜம்பு குளம் போஸ்ட் வாலாஜா தாலுக்கா ராணிப்பேட்டை மாவட்டம் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான மொபைல் போன் நம்பரை வாங்கிப் பார்த்ததில் இன்டர்நேஷனல் கேடி மோகன்ராஜ் தகப்பனார் பெயர் வாசியப்பன் வண்ணாரப்பேட்டை தெரு உசிலம்பட்டி மதுரை என்ற நபர் பலமுறை குற்றவாளி ரமேஷிடம் பலமுறை தொடர்பு கொண்டது சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிய வந்தது. அந்த எண்ணின் டவர் லொகேஷனை பெற்று சென்னை டி நகர் போக் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டை நேற்று29.5.2024 காண்பித்தது அங்க போய் விசாரித்த போது மோகன்ராஜ் தகப்பனார் பெயர் வாசி அப்பன் என்று கூறினான். அவனை விசாரித்த போது கேடி ரமேஷ் குமாரின் ஆர்கே இன்சூரன்ஸ் ஜோன் மற்றும் ஆர் கே மோட்டார்ஸ் என்ற பெயரில் உள்ள அக்கவுண்ட்டில்  பிஎஸ் பேங்க் பிஎன்பி பேங்க் எஸ்பிஐ பேங்க் ஆர் பி எல் பேங்க் ஐஓபி பேங்க் பெடரல் பேங்க் எஸ்பிஐ முருகன் டிரேடர் இண்டுஸ்  பேங்க் ஏ யூ ஸ்மால் பேங்க் எஸ் பேங்க் களின்கிட்களைப் பெற்று அதனை வெளிநாட்டில் உள்ள நபர்களுக்கு விற்பனை செய்து அதன் மூலம் பொது மக்களை ஏமாற்றிய மோசடிகாரர்களிடமிருந்து 1.5 சதவீதம் கமிஷனாக பணம் பெற்றதாகவும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றியது தெரிய வந்தது. விசாரணையில் கேடி மோகன்ராஜ் பொதுமக்களை ஏமாற்ற பயன்படுத்திய செல்போன் முருகன் ட்ரேடர்ஸ் என்ற பெயரில் காசோலை புத்தகம் ஏர்டெல் சிம் கார்டுடன் கூடிய ஒன்பது கவர்கள் கேடி டியிடம் கைப்பற்றப்பட்டது . இது குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கூறுகையில் தெரியாத நபர்கள் அனுப்பும் வரும் லிங்கில் செய்திகள் நம்ப வேண்டாம் . பணத்தை இழக்க வேண்டாம் . பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் . மேலும் அவர் கூறுகையில் கேடிகள் மொத்தமாக ரூபாய் 19 கோடி 54 லட்சத்து 72 ஆயிரத்து 216ஐ ஏமாற்றியுள்ளான்..