கோவை பூம்புகார் விற்பனையகத்தில் பணம் திருட்டு..!

கோவை பெரிய கடை வீதியில் மணிக்கூண்டு அருகே பூம்புகார் நிலையம் உள்ளது. கடந்த 25ஆம் தேதி இரவு யாரோ மர்ம ஆ சாமிகள் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மேஜை டிராயரில் இருந்த 1 லட்சத்து 44 ஆயிரத்து 877 ரூபாயை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அதன் மேலாளர் ஆனந்தன் உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.