மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் 3-வது மாடியில் இருந்து குதித்து தாய் தற்கொலை..

கோவையில் ஆர் .எஸ் . புரம் கிழக்கு ராமலிங்கம் ரோடு சேர்ந்தவர் சந்திரசேகரன் அவரது மனைவி மாலினி (வயது 52)இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மகனுக்கு 33 வயதாகிறது. இன்னும் திருமணம் முடியவில்லை. இதனால் தாய் மாலினி மனவருத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவில் அவரது வீட்டில் 3 -வது மாடியிலிருந்து குதித்தார். தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மாலினி கிடந்தார் .அப்போது மனைவியுடன் குருவாயூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய மூத்த மகன் அங்கு வந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து போலீசுக்கு தெரியாமல் அவரது சடலத்தை தகனம் செய்வதற்கு குடும்பத்தார் மயானத்துக்கு கொண்டு சென்றனர். இது பற்றி ஆர் .எஸ். புரம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து கணவர் சந்திரசேகரன் ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..