வால்பாறையில் எம்.பி ஈஸ்வரசாமி வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிப்பு..!

கோவை மாவட்டம் வால்பாறையில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று வால்பாறை சட்டமன்றத் மேல் பகுதியான அட்டகட்டி, வாட்டர் பால்ஸ், ரொட்டிக்கடை, வால்பாறை நகர் பகுதி மற்றும் சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்காளர்களை சந்தித்து நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் முன்னதாக பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து திமுகவின் கட்சிக்கொடியேற்றி வைத்த நிலையில் வால்பாறை நகர கழகத்தின் சார்பாக அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கோழிக்கடை கணேசன், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் மாவட்ட, நகர, தொழிற்சங்க, ஐடி விங்க்,சார்பு அணி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..