கோவையில் நகைக்காக மூதாட்டி கொலை – வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை..!

கோவை பக்கம் உள்ள பன்னிமடையை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 70) இவர் கடந்த 2021-ம் ஆண்டு நகைக்காக கொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்திற்காக சுப்பிரமணியன் மகன் கருப்பையா என்ற வினோத் (25) என்பவர் மீது தடாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நேற்று
முடிவு பெற்று குற்றவாளி கருப்பையா என்ற வினோத்துக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.1500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் தமிழரசன் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் பாராட்டினார்.