சூலூரில் வாய்க்கால் தண்ணீரில் மூழ்க வைத்து வாலிபர் படுகொலை – கைது செய்யப்பட்ட 5 பேர் திடுக்கிடும் வாக்குமூலம்..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம், பாரதிபுரத்தில் தனியார் தோட்டத்துகிணறு அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வரும் லாரன்ஸ் லூகாஸ் செல்வின் என்பவரது மகன் சாமுவேல் ( வயது 21) என்பது தெரியவந்தது இவர் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ..இது தொடர்பாக போலீசார் பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த சுஜித் (வயது 28)என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:- சாமுவேல் மற்றும் அவரது நண்பர் ஆகாஷ் ஆகியோர் தலைமையில் 5 மேற்பட்டவர்கள் ஒரு கோஷ்டியாக இருந்துள்ளனர். பரத், நவீ ன் ,ஜெயக்குமார், பிரனேஷ் ஆகியோர் ஒரு கோஷ்டியாக இருந்துள்ளனர். இதில் சுஜித் கோஷ்டி யினர் தனியாக செல்வோரை அடித்து பணம் ‘செல் போன் பறிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர் ..இதை சாமுவேல் மற்றும் அவரது நண்பர்கள் கண்டித்தனர். இதனால் அந்த இரு கோஷ்டிகளிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சுஜித் கோஷ்டி சமாதானம் செய்வது போல் சாமுவேல், ஆகாஷை அழைத்துள்ளனர். அதில் நம்பி சென்றபோது அவர்கள் இடையே மீண்டும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் சுஜித் கோஷ்டியை சேர்ந்த சாமுவேல், ஆகாசைசுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியும்,வாய்க்கால் தண்ணீரில் மூழ்க வைத்தும் கொலை செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துசுஜித் (வயது 24),திருப்பூர் முருகேசன் மகன் ஜெயக்குமார் ( 22)பள்ளபாளையம் பாரதி நகரை சேர்ந்த சுப்ரமணியம் மகன் பரத் (வயது 22),கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் பிரனேஷ், (வயது 23) சூலூர் சேர்ந்த மணிமாறன் மகன் நவீன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.இவர்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கொலையாளிகளை துரிதமாக கைது செய்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்லெனின் அப்பாதுரை உள்ளிட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் பாராட்டினார்..