ரயில் தண்டவாளத்தில் பெண் மர்ம மரணம்..

கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார் . இதுகுறித்து கோவை ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கும். சிவப்பு நிறம் உடையவர். பச்சை நிற சுடிதாரும், மஞ்சள் நிற பேண்ட் அணிந்து உள்ளார். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை .இவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு செத்தாரா? என்பதும் தெரியவில்லை. இது குறித்து கோவை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..