சூலூர் அருகே ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!

கோவை சூலூர் அருகே உள்ள சந்தமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் .இவரது மகன் பஞ்சலிங்கம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், அவரது தாய் ஆகியோருக்கும் இடையே கடந்த 22ஆம் தேதி டிப்பர் லாரி நிறுத்துவது தொடர்பாக வாய் தகறாறு ஏற்பட்டது .இது தொடர்பாக ஜெயப்பிரகாஷ் சுல்தான் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் .அதன்பேரில் சுல்தான் டேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பஞ்சலிங்கத்தை செல்போனில் பேசி உங்கள் மீது புகார் வந்துள்ளது . அது தொடர்பாக விசாரிக்க வேண்டியது உள்ளது. எனவே உடனே போலீஸ் நிலையத்திற்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். அங்கு இரு தரப்பினரிமும் அவர் விசாரணை நடத்தினார். அதன் பிறகு அவர் புகார் பெறப்பட்டதற்கான ஏற்பு ரசீது ( சி. எஸ். ஆர்.) வழங்கினார். இதை யடுத்து புகாரின் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க பஞ்சலிங்கத்திடம் கடந்த 25ஆம் தேதி ரூ 4ஆயிரம் லஞ்சமாக வாங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை கையும் களவமாக பிடித்து கைது செய்தனர். லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்..