சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய விதிமுறைகள்.!!

கேரளாவில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல் மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதையடுத்து, ‘ஆன்லைன் மூலம் தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த ஆண்டு அனுமதிக்கப்படுவர்’ என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதுகுறித்து கேரள அரசின் தேவஸ்வம் அமைச்சர் வி.என்.வாசவன் நேற்று கூறியதாவது: தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கூட்டம் மற்றும் ஒழுங்குமுறையைத் தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனில் நாள் ஒன்றுக்கு 80,000 பேர் அனுமதிக்கப்பட உள்ளனர்.

சபரிமலைக்கு செல்ல உடனடி டிக்கெட் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. அதே நேரத்தில், குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்திற்கு டிக்கெட் பதிவு செய்யலாம். விரதம் இருந்து சபரிமலைக்கு வருபவர்கள் ஐயப்பனை தரிசனம் செய்யாமல் செல்ல வேண்டாம். அனைவருக்கும் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.