ஆ.இராசா எம்.பி.க்கு நீலகிரி செயலாளர், சுற்றுலா அமைச்சர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து..!

உதகை : நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று 3வது முறையாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசாக்கு, மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் திமுக கழகத் துணைச் செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசரதி, உதகை நகர செயலாளர் சார்ஜ், கழக செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், உதகை நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி, கூடலூர் நகர மன்ற தலைவர் ச. பரிமளா, கேத்தி லாரன்ஸ் உட்பட நீலகிரி மாவட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், நகர-ஒன்றிய-பேரூர் கழக செயலாளர்கள் நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள், குன்னூர் உதகை கூடலூர் கழக செயல் வீரர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மற்றும் மேட்டுப்பாளையம் அவினாசி தொண்டாமுத்தூர் கழகத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டு மூன்றாவது முறையும் வெற்றி பெற்ற நீலகிரி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஆ.இராசா அவர்களுக்கு ரோஜா மாலை அணிவித்து பொன்னாடை போற்றி நடனமாடி கோஷங்கள் எழுப்பி உற்சாகத்துடன் வரவேற்றனர்.  வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினரும் கழக துணைத் பொதுச் செயலாளருமான
ஆ இ ராசா அவர்களை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் வெற்றியின் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்,