பெண்ணிடம் செயின் பறிப்பு

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், இந்திரா கார்டனை சேர்ந்தவர். கணேசன்.இவரது மனைவி உஷாராணி ( வயது 55) அங்குள்ள வீரமாச்சி அம்மன் கோவில் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார் நேற்று மாலை இவரது கடைக்கு பைக்கில் இருவர் வந்தனர். ஒருவர் கடைக்கு சென்று சிகரெட் வாங்குவது போல் நடித்து அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு பைக்கில் ஏறி தப்பி சென்று விட்டார் .இது குறித்து உஷாராணி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷாவழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.