30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாப பலி – 2 பேர் மீது வழக்கு..!

கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் மிட்டு ரவுட் (வயது 23) பட்டணம் புதூரில் தங்கியிருந்து பிளம்பிங் வேலை செய்து வந்தார்.இவர் நேற்று பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் 30 அடி உயரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக கட்டிட மேஸ்திரி கோபாலகிருஷ்ணன், இன்ஜினியர் முரளிதரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.