கார் மோதி வடமாநில தொழிலாளி பலி… கார் தீப்பிடித்து எரிந்தது : பிளஸ் 2 மாணவன் படுகாயம்-பெற்றோர் மீது வழக்குப்பதிவு.!!

கோவை சவுரிபாளையம், மகாலட்சுமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். சிமெண்ட் டீலராக உள்ளார்.இவரது மகன் சுஜித் கன்னா ( வயது 17) பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று இவர் அவிநாசி ரோட்டில் கார் ஓட்டிச் சென்றார். பீளமேடு காவல் நிலையம் அருகே வேகமாக சென்ற போது திடிரென்று நிலை தடுமாறி கார் மேம்பால கட்டுமான பணியில் வாகனங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அக்சய் பேரா ( வயது 23) என்பவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார். பின்னர் அந்த கார் தடுப்புச் சுவரில் மோதி தீ பிடித்து எரிந்தது..இதில் மாணவன் சுஜித்துக்கு தீக்காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கமணி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக மாணவன் சுஜித் குமார், உரிமம் பெறாமல் காரை ஓட்டுவதற்கு அனுமதி அளித்த மாணவனின் தந்தை மோகன்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..