வீடு புகுந்து பணம் திருடிய வட மாநில வாலிபர் கைது..!

கோவை செல்வபுரம் சொக்கம்புதூர் அய்யாவு பன்னாடி வீதியை சேர்ந்தவர் ஆகாஷ் அலி (வயது 57)இவர் வீட்டிலிருந்து பெண்களுக்கு துணி தைக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று வேலை முடிந்து கதவை பூட்டாமல் வீட்டில் தூங்கி விட்டார். அப்போது யாரோ கதவை திறந்து உள்ளே புகுந்து அங்கிருந்த செல்போன் பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஷேக் ஆகாஷ் அலி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து வங்காள தேசத்தை சேர்ந்த கசினா பால் தாஸ் (வயது 31) என்பவரை கைது செய்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.