தபால் அலுவலகத்தில் புகுந்து அதிகாரிக்கு கத்திக்குத்து – உதவி தபால் அதிகாரி மீது புகார்.!

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள காடம்பாடி, ஏரோ நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 43 )இவர் கோவை நஞ்சுண்டாபுரம் தபால் அலுவலகத்தில் உதவி தபால் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி இவர் தபால் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அதைப் பகுதியை சேர்ந்த உத்தமன் என்பவர் தபால் அலுவலகத்துக்குள் புகுந்து இவரை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தினாராம். இதில் இவருக்கு இடது கை, முகம் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது.இவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து விஜயகுமார் போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் விசாரணை நடத்தி உத்தமன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் உதவி தபால் அதிகாரி விஜயகுமார் அதே தகவல் அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் நஞ்சுண்டபுரம் கிழக்கு புதூரை சேர்ந்த சினேகா ( வயது 21 )என்பவரை மானபங்கம் செய்ததாக சினேகா போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார் .இதன் பேரில் உதவி தபால் அதிகாரி விஜயகுமார் மீது போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்..