கோவை : மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள காந்திபுரம் 2 -வது வீதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ். இவரது மனைவி ரெஜினா ( வயது 63 )இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். தூக்க கலக்கத்தில் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார் . இதில் அவரது முகத்தில் அடிபட்டது .அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து மகன் செபாஸ்டின் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.. இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
படுக்கையில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாவு..
