பாம்பு கடித்து மூதாட்டி பரிதாப சாவு..

கோவை: பொள்ளாச்சி, ராமபட்டினம், அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி. இவரது மனைவி சரோஜினி (வயது 72) இவர் கடந்த 6 – ந் தேதி மாப்பிள்ளை கவுண்டன் புதூரில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார் . இவரது மகன் வெள்ளியங்கிரி வடக்கிபாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.