பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து முதியவர் தற்கொலை..

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்க நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 75) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கடந்த ஒரு வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்றுஅங்குள்ள ஜீவகாந்தம் நகரில்மணி என்பவரது நிலத்தில் வைத்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார் .இது குறித்து மனைவி பொற்கொடி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார் . சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.