எலக்ட்ரிக் ஆட்டோ மோதி முதியவர் பரிதாப பலி – பெண் டிரைவர் மீது வழக்குபதிவு..!

கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக ரோட்டை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 73 ) இவர் நேற்று சுந்தராபுரம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக வந்த எலக்ட்ரிக் ஆட்டோ இவர் மீது மோதியது. இதில் மாரியப்பன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் . இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் எலக்ரிக் ஆட்டோ ஓட்டி வந்த குறிச்சி , காந்தி நகரை சேர்ந்த தேன்மொழி (வயது 34) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.. மேலும் விசாரணை நடந்து வருகிறது..