கோவையில் ஆம்னி வேன் மோதி முதியவர் பலி..

கோலை அருகே உள்ள சின்னியம்பாளையம், கமலா நகரை சேர்ந்தவர் வேலு ( வயது 76)இவர்கடைக்கு செல்வதற்காக, சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மாருதி ஆம்னி வேன் இவர் மீது மோதியது .இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து இவரது மகன் ஐயப்பன் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மாருதி வேன் ஓட்டி வந்த அரசூரைச் சேர்ந்த ராமராஜ் (வயது 23) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.