9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள அர்த்தநாரிபாளையம், ரெட்டியாரூரைச் சேர்ந்தவர் பெருமாள் ( வயது 64) இவர் 2021 ஆம் ஆண்டு அங்குள்ள ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பெருமாளை கைது செய்தனர் . இவர் மீது போக்சோ
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்து நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட பெருமாளுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 5000 அபராத மும் ,பாதிக்கப்பட்டசிறுமிக்கு ரூ 2 லட்சம் இழப்பீட்டு தொகையும் வழங்க கோரி தீர்ப்பளித்தார்..