தொண்டாமுத்தூர் அருகே பாத்ரூம் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் சாவு..

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் சந்தைப்பேட்டை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45 )பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலையில் அவரது வீட்டில் குளியல் அறையில் குடிநீர் கசிவு ஏற்பட்டதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது 8 அடி உயர சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாட்டுக்குள் சிக்கி அதே இடத்தில் பலியானார். இதுகுறித்து இவரது மனைவி வடிவுக்கரசி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.