பைக் மீது வேன் மோதி ஒருவர் பரிதாப பலி..

கோவை வையம்பாளையம்அருகே உள்ள கோட்டை பாளையம்,காவல் காளியம்மன் நகரை சேர்ந்தவர் அசோகன் இவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 38) இவர் நேற்று முன்தினம் அன்னூர் – கோவை ரோட்டில் பைக் ஓட்டி சென்று கொண்டிருந்தார்.அன்னூர்கே.ஜி. மில் அருகே சென்றபோதுஅந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஈச்சர்வன் இவரது பைக் மீது மோதியது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக அன்னூரில் உள்ள அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது மனைவி தரணிப்பிரியா அன்னூர் போலீசில் புகார் செய்தார்.. போலீசார் ஈச்சர் வேன் டிரைவர் பிரபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.