பாத்ரூமில் தூக்கு போட்டு பெயிண்டர் தற்கொலை..

கோவை சின்ன வேடம்பட்டி அருகே உள்ள உடையாம்பாளையம், அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் அருள் பிரகாஷ் ( வயது 36) பெயிண்டர்.குடிப்பழக்கம் உடையவர் .இவர் கடந்த 2 வாரங்களாக வேலைக்கு செல்லவில்லை .இதை அவரது மனைவி கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்பிரகாஷ் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் உள்ள விட்டத்தில் துண்டைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மனைவி கலைக்குயில் சரவணம்பட்டி போலீஸ் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.