ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசியூரை சேர்ந்தவர் செந்தில் ( வயது 47) பெயிண்டர். .இவர் நேற்று அன்னூர் பக்கம் உள்ள மங்கா பாளையம் ஜே .ஜே . நகரில் ஒரு வீட்டில் 15 அடி உயரத்தில் இருந்து பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார் .இதில் பலத்த காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை எடுத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார் .இது குறித்து இவரது தாயார் ராமாயாள் அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பரிதாப பலி..
