15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பரிதாப பலி..

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசியூரை சேர்ந்தவர் செந்தில் ( வயது 47) பெயிண்டர். .இவர் நேற்று அன்னூர் பக்கம் உள்ள மங்கா பாளையம் ஜே .ஜே . நகரில் ஒரு வீட்டில் 15 அடி உயரத்தில் இருந்து பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார் .இதில் பலத்த காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை எடுத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார் .இது குறித்து இவரது தாயார் ராமாயாள் அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..