காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு… காதலனுடன் இளம்பெண் ஓட்டம்..!

கோவை ரத்தினபுரி ,சம்பத் விதியைச் சேர்ந்தவர் முத்துவேல் .இவரது மகள் சிந்திகா (வயது 23 )இவர் அதே பகுதியைச் சேர்ந்த விமல் என்பவரை காதலித்து வந்தாராம். இது சிந்திகாவின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிந்திகா கடந்த 31ஆம் தேதி வீட்டில் இருந்து திடிரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவர் தந்தை முத்துவேல் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிந்திகா தனது காதலனுடன் சென்றிருப்பது தெரியவந்தது. இவர்களை தேடி வருகிறார்.