ஆவடி: பழைய மகாபலிபுரம் சாலையில் காரப்பாக்கம் பகுதியில் உள்ள கேப் ஜெமினி என்ற தகவல் தொழில்நுட்ப கம்பெனியில் பணிபுரிந்து வருவதாக காட்டுப்பாக்கம் கார்த்திக் வயது 41 என்பவர் நல்ல முறையில் வேலை செய்து வருவதாகவும் இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்களை மக்கள் குறை கேட்பு முகாமில் சந்தித்து பேஸ்புக்கில் டிரேடிங் செய்வது எப்படி என்ற கவர்ச்சிகரமான விளம்பரம் 9514761152 மொபைல் போன் எண்ணிலிருந்தும் 9748223511 மற்றொரு எண்ணில் இருந்தும் ஜோஷிதா வர்ஷினி என்ற பெயர் பெயர் கொண்ட நபரிடமிருந்து வாட்ஸ் அப்பிற்கு htt ://indiatcg. Com என்ற டிரேடிங் தளத்தின் லிங்க் மெசேஜ் வந்ததாகவும் அதை திறந்து உள்ளே போய் டிரேடிங் தொடர்பான விவரங்களை பார்த்தபின் இன்ஸ்டிடியூட் சனல் அக்கவுண்ட்டை பயன்படுத்த தனக்கு அனுமதி கிடைத்ததாகவும் அதனைத் தொடர்ந்து மேற்படி தளத்தில் ரூ 4 லட்சம் முதலீடு செய்ததாகவும் பின்னர் ரூ 36,000 பணத்தை மேலே குறிப்பிட்ட அக்கவுண்டில் இருந்து எடுத்ததாகவும் அடுத்த சில தினங்களில் 10% லாப பங்கீடு கமிஷன் போக 300 சதவிகிதம் லாபம் கிடைக்கின்ற இன்ட்ரா டே பிளாக் ட்ரேட் அண்ட்ஐ பி ஓ ஆகிய டிரேடிங்கில் கலந்து கொள்ள விரும்புவதாக வாட்ஸ் அப் சேட்டிங்கில் தெரிவித்ததாகவும் மறுநாளே மேலே குறிப்பிட்ட பணத்தை செலுத்தியதாகவும் அடுத்தடுத்த நாட்களில் ரூபாய் 27 லட்சம் பணம் மாத கட்டணமாக செலுத்துமாறும் இல்லையெனில் அக்கவுண்ட் ஃப்ரீஸ் ஆகிவிடும் என தெரிவித்ததன் பேரில் லாப கட்டணம் ரூபாய் 27 லட்சத்து 96 ஆயிரத்து 979 செலுத்தியதாகவும் இதே போல ஹெச்டிஎஃப்சி பேங்க் ஹைதராபாத் ஹைடெக் சிட்டி பிரான்ச் மற்றும் அவரது மனைவியின் ஹெச்டிஎஃப்சி வங்கி கணக்குகளின் மூலம் பல்வேறு தவணைகளில் மோசடிக்காரர்கள் பல வங்கி கணக்குகளில் ரூபாய் 1 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 479 மோசடி செய்துள்ளனர்.
மேலே குறிப்பிட்ட பணத்தை இழந்து நான் வாழ்வதா சாவதா விரக்தியோடு வாழ்ந்து வருகிறேன். என்னை உயிர் பிழைக்க வையுங்கள் குற்றவாளிகளை பிடித்து கைது செய்து இழந்த பணத்தை மீட்டுக் கொடுங்கள் கண்ணீரோடு போலீஸ் கமிஷன் சங்கரிடம் புகார் மனு அளித்தார் அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரை அழைத்து கடும் நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்தார் சைபர் கிரைம் போலீசாரும் துணை போலீஸ் கமிஷனர் பெருமாள் மற்றும் போலீஸ் படையினர் முக்கிய குற்றவாளிகள் ரமேஷ் குமார் வயது 38 தகப்பனார் பெயர் வெற்றிவேல் நாடார் 1 வது குறுக்கு தெரு ராஜேஷ் நகர் பள்ளிக்கரணை சென்னை 2. அருண் வயது 30 தகப்பனார் பெயர் ஆனந்தன் பெரிய தெரு தொண்டமா நத்தம் கிராமம் ஜம்பு குளம் போஸ்ட் வாலாஜாபேட்டை தாலுக்கா ராணிப்பேட்டை மாவட்டம் இவர்கள் இருவரும் பல்வேறு வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் ஏமாற்றியது தெரிய வந்தது . இந்த இரண்டு கேடிகளும் புகார்தாரர் கார்த்திக்கை ஏமாற்றியது தெரிய வந்தது .போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை கைது செய்தனர் . கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்பு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..