கோவை ஏப் 24 தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை யடுத்து கோவை மாநகராட்சி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 215 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று 2-வது நாளாக கொடிக்கம்பங்கள் அகற்றும்பணி நடைபெற்றது. இதில் மத்திய மண்டலத்தில் 99, கிழக்கு மன்றத்தில் 33 ,வடக்கு மண்டலத்தில் 47, மேற்கு மண்டலத்தில் 36 ,தெற்கு மண்டலத்தின் 30, என மொத்தமாக 245 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்
கோவையில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்.
