பாசஞ்சர் ஆட்டோ திருட்டு..!

கோவை ஒண்டிப்புதூர் சவுண்டம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 52) இவர் கடந்த 5 ஆண்டுகளாக அகமது என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று முன் தினம் ஆட்டோவை கஸ்தூரி நகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார் . திரும்பி வந்து பார்த்த போது ஆட்டோவை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவிந்தராஜ் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கபில் ராஜ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..