மின்சாரம் தாக்கி மயில் பரிதாப சாவு..

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள பாலாஜி நகருக்குநேற்று ஒரு பெண் மயில் வந்தது. அந்த மயில் மின்சார கம்பியின் அருகே பறந்து சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தது. இதை அறிந்த கிராம நிர்வாக அதிகாரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார் .அதன் பேரில் வனத்துறையினர் இறந்த மயிலை மீட்டு சென்றனர்..