ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்..!

ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் வாரந்தோறும் புதன்கிழமை அன்று திருமுல்லைவாயில் எஸ் எம் நகரில் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் போலீஸ் கமிஷனர் மக்கள் நாயகன் சங்கர் தலைமையில் சிறப்பாக நடந்தது. பொதுமக்கள் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என கண்ணீர் மல்க கோரிக்கைகளை கூறினர். 64 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். இக் குறை தீர்க்கும் முகாமில் துணை ஆணையாளர்கள் உதவி ஆணையாளர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த குறை தீர்க்கும் முகாம் வாரந்தோறும் புதன்கிழமை அன்று சிறப்பாக நடைபெறும் என போலீஸ் கமிஷனர் கி. சங்கர் தெரிவித்துள்ளார்..