ஆவடியில் போலீஸ் கமிஷனர் ஆபீஸில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்..!

ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் சிறப்பாக நடந்தது இக்குறை தீர்ப்பு முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்கள் பொது மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து 60 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார் இக்குறை தீர்க்கும் முகாமில் காவல் கூடுதல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்கள் ஜெயலட்சுமி போக்குவரத்து பிரிவு ஐமன் ஜமால் ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் மாதவரம் பாலகிருஷ்ணன் மற்றும் உதவியாளர் கள் உட்பட அனைத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் இக்குறை தீர்க்கும் சிறப்பு முகாம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்பட்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக துரித விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் ஆணையாளர் சங்கர் தெரிவித்தார்..